Passt nicht? Macht nichts! Sie können Artikel bis zu 30 Tage zurückgeben
Mit einem Geschenkgutschein können Sie nichts falsch machen. Der Beschenkte kann sich im Tausch gegen einen Geschenkgutschein etwas aus unserem Sortiment aussuchen.
Bis zu 30 Tage Rückgaberecht
இந்தத் தொகுப்பில் எழுத்தாளர் சாந்தீபிகாவின் 19 சிறுகதைகளும் 3 குறு நாவல்களும் இடம் பெற்றுள்ளன.
அச்சடித்த புத்தகமாகவும், எழுத்தாளரது புனைவுக் கதைகளின் மொத்தத் தொகுப்பாகவும் ஒரு நூல் இருக்கட்டுமே என்கிற எண்ணத்தில் இப்போது இந்த நூல் வெளிவந்திருக்கிறது. (இதிலுள்ள சிறுகதைகளும், குறு நாவல்களும் வேறு தனி மின்நூல்களாக ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன).
ஒரு எழுத்தாளனாய் சாந்தீபிகாவின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், அவரது எழுத்தின் பரிணாம வளர்ச்சியை நீங்கள் இந்த நூலின் வழி ஓரளவு படித்து ரசிக்க இயலும். அதற்காக, ஒவ்வொரு கதையும் பிரசுரமான அல்லது எழுதப்பட்ட ஆண்டும் இவற்றில் குறிப்பிட்டிருக்கின்றன.
பெரும்பான்மையான சிறுகதைகள் 1976-2002 கால கட்டத்தில் பிரபல தமிழ் பத்திரிகைகளான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சாவி இவற்றில் பிரசுரமானவை. அப்படிப் பத்திரிகைகளில் பிரசுரமானபோது வந்திருந்த படங்களும் ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இதிலுள்ள பெரும்பான்மையான கதைகளும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், ஒழுக்க, தார்மிக நெறிகள், கட்டுப்பாடுகள், சுகதுக்கங்கள், பலங்கள், பலவீனங்கள், சபலங்கள் இவற்றைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் உள்ள கதைகளில் ...
கிராமத்து வைதிக சாஸ்திரிகளின் கதை முதல், கம்பியூட்டர் ஸாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இளைஞன் கதை வரை உண்டு. உலகைத் துறந்த சன்னியாசியின் கதை முதல், தீவிரமான காதல் கதை வரை உண்டு. கணவனின் உறவுக்காக ஏங்கும் பெண்ணின் கதையிலிருந்து, காலம் கடந்து கணவனை நேசிக்கத் தொடங்கிய பெண்ணின் கதை வரை உண்டு.
நக்கலும் நகைச்சுவையும் கொண்ட கதைகளிலிருந்து, ஆழமாய் ஆன்மிகத்தைத் தொடும் கதைகள் வரை இந்தத் தொகுப்பில் உண்டு. உள
Hallo! Ich bin Libroamiko, dein Buchberater.
Wie kann ich dir helfen?